Wednesday, February 2, 2011

கண்ணே நீ போகும் - தாளம்



இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன்


************************


கண்ணே நீ போகும் வழி எங்கு போனாலும்
எல்லா வழியும் என் வீட்டு வாசலில்
வந்துதான் முடியும்

காதலியே………

கலை மானே…
கலை மானே உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா
உன் கையிலே…
உன் கையிலே பூ வலை போடவா
உன் கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே…

தொலைவானபோது பக்கம் ஆனவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ ?
தொலைவானபோது பக்கம் ஆனவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ ?
மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ ?
சிருங்கார பூவுக்கு சேவை செய்யவோ ?

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூ மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே…

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்சம் நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்சம் நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
நீ என்னை பிரிந்ததா யார் சொன்னது – என்
உயிர் உள்ள புள்ளிதான் நீ வாழ்வது..

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூ மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா…
காதலியே…

பூங்காற்றிலே - உயிரே



இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுவர்ணலதா, உன்னி மேனன்


*****************************************


ஓ…கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…

கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…

கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…


பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா…..


பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா… நெஞ்சு நனைகின்றதா…
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா…..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா…..


பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்

கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…
கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா…..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா…..


பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்

பூக்கள் பூக்கும் - மதராஸப்பட்டினம்










 இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ், ஆந்தரே, ஹரணி, ரூப்குமார் ரத்தோர்



********************



தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே
பார்த்த தாரும் இல்லயே

புலரும் காலை பொழுதை
முழு மதியும்
பிரிந்து போவதில்லயே

நேற்றுவரை நேரம் போகவில்லயே
உனது அருகே நேரம் போதவில்லயே

எதுவும் பேசவில்லயே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லயே
இது எதுவோ…

இரவும் விடியவில்லயே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லயே
பூந்தளிரே …ஓ…..


தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

வார்த்தை தேவை இல்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே

நேற்று தேவை இல்லை
நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே

வேரின்றி விதை இன்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூ பூக்குதே

வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்

இதை அரிய
எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால்
சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே…
====
ohho where would I be
without this joy inside of me
it makes me want to come alive
it makes me want to fly
into the sky…
ohho where would I be
if I didn’t have you next to me
ohho where would I be
ohho where…
ohho where…

====
ஆஹா நீ நௌ நீ
நீ நௌ நீ
நீ நீ நூ நீ ந ந

நீ நௌ நீ
நீ நௌ நீ
நீ நீ நூ நீ ந ந

நீ நௌ நீ
நீ நௌ நீ
நீ நீ நூ நீ ந ந

நீ நௌ நீ
நீ நௌ நீ
நீ ந நூ
ஆஹா….

எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே

என்ன உறவு இது
எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே

யார் என்று அரியாமல்
பேர்கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே

ஏன் என்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே

பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில்
பயணம் முடிவதில்லயே

காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லயே
இது எதுவோ…


தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

பூக்கள் பூக்கும் தருணம்
ஆதவனை
பார்த்த தாரும் இல்லயே
புலரும் காலை பொழுதை
முழு மதியும்
பிரிந்து போவதில்லயே

நேற்றுவரை நேரம் போகவில்லயே
உனது அருகே நேரம் போதவில்லயே

எதுவும் பேசவில்லயே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லயே
என்ன புதுமை…

இரவும் விடியவில்லயே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லயே
இது எதுவோ…


தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

என் நெஞ்சில் - பாணா காத்தாடி





 

இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : சதனா ஷர்கம்


*************************


என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்ததந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன் இடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே உள்தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையா இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்

உன்னை பார்த்ததும்
அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே….