பாடியவர் : சைந்தவி , சோனு நிகம்
பாடல் :
இசை : G.V.பிரகாஷ்
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீபோகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
உயிரே என் உயிரே நீயே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னையே பிரிகிறேன்
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றென மாறேனோ ஒ … ஒ …
உன் சுவாசத்தில் சேர்வேனோ....
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வாசிப்பேனே..
உயிரே என் உயிரே உனக்குள் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் என்னையே பிரிகிறேன்
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து..
காலங்கள் மறப்பேனோ
உயிரே என் உயிரே
நாமே ஓர் உயிரே ..
நம்மை என்னை அழுகிறேன் கரைகிறேன்..உயிரை துறக்கிறேன்
நாமே ஓர் உயிரே ..
நம்மை என்னை அழுகிறேன் கரைகிறேன்..உயிரை துறக்கிறேன்