Friday, November 19, 2010

அனல் மேலே பனி துளி - வாரணம் ஆயிரம்




பாடியவர் : சுதா ரகுநாதன் 
பாடல் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 



அனல் மேலே பனி துளி 
அலைபாயும் ஒரு கிளி  
மரம் தேடும் மழை துளி
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி 
உறக்கங்கள் உறை பனி 
எதற்காக தடை இனி
அனல் மேலே பனி துளி
அலைபாயும் ஒரு கிளி 
மரம் தேடும் மழை துளி
இவைதானே இவள் இனி 
இமை இரண்டும் தனி தனி
உறக்கங்கள் உறை பனி
எதற்காக தடை இனி


எந்த காற்றின் அளாவலில் மலரிதல்கள் விரிந்திடுமோ?
எந்தன் தேவ வினாடியில் மனஅறைகள் திறந்திடுமோ?
ஒரு  சிறுவலி  இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே 
உனது  இரு  விழி  தடவியதால்  அமிழ்ந்துவிட்டேன்  மயக்கத்திலே 

உதிரட்டுமே உடலின்  திரை அது  தான்  இனி  நிலவின்  கரை கரை

அனல் மேலே பனி துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி 
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி 
உறக்கங்கள் உறை பனி
எதற்காக தடை இனி

சந்திதோமே கனாக்களில் சில முறையா பல முறையா 
அந்தி மாலையில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா?
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடல் அலையே 
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே 
உனதலைகள் என்னை அடிக்க கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திடுமா

அனல் மேலே பனி துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி 
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி 
உறக்கங்கள் உறை பனி
எதற்காக தடை இனி

No comments:

Post a Comment