Monday, December 13, 2010

கடவுள் தந்த அழகிய - மாயாவி







பாடியவர் : S.P.சரண் & கல்பனா
பாடல்  :
இசை :
தேவி ஸ்ரீ பிரசாத்




கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு … .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ….


கருணை பொங்கும்உள்ளங்கள் உண்டு ..
கண்ணிற் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு .. …
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..


அழகே பூமியின் வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடைப்பெருவோம்
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு


பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது .
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ .. o..ugh.. ohh.


எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ …..
அது வரை நாமும் சென்றுவிடுவூம்
விடைபெறும்நேரம்  வரும் போதும் ……..  
சிரிப்பினில் …நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
எந்நாளும் நெஞ்சில் திராமல் வாழுமே


கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு ….


நாம் எல்லாம் சுவாசமே தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்மேகங்கள் இடங்களே பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இழையுதுரும் ….


வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும் ……
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானே
கேளடி … ….


கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் முடியே வாழ்த்து பாடு ….

கல்யாண மாலை - புதுப் புது அர்த்தங்கள்






பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
பாடல்  :
இசை : இளையராஜா



கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யான மாலை)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா
அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே...

(கல்யாண மாலை)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனாகும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலனேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...

(கல்யாண மாலை)

Friday, December 10, 2010

அன்பே வா அருகிலே - கிளிபேச்சு கேட்கவா..




 

பாடியவர்கள்  - K.J. ஜேசுதாஸ்
பாடல் -
இசை - இளையராஜா   

 
அன்பே  வா  அருகிலே ....
என்  வாசல்  வழியிலே ....

உல்லாச  மாளிகை மாளிகை ...
எங்கே  என்  தேவதை தேவதை
நீ  தானே வேண்டும்   என்று   ஏங்கினேன் ....
நாள்தோறும் முள்ளின்  மீது  தூங்கினேன்...

இதனை  நாள்  வாய்  மொழிந்த ....
சித்திரமே  இப்பொழுது  மௌனம்  ஏன்  தானோ ?
மின்னல்  என  மின்னி  விட்டு
கண்  மறைவாய்  சென்று  விட்ட மாயம்  நீ  தானோ ?
உன்னால்  வந்த  காதல் உன்னால்  தானே  வாழும்
என்னை  நீங்கி  போனால் ...உன்னை  சேரும்  பாவம் ....
எனக்கொரு  அடைக்கலம்  ...
வழங்குமோ உன்  இதயமே.. 

அன்பே  வா  அருகிலே ....
என்  வாசல்  வழியிலே ....
உல்லாச  மாளிகை மாளிகை ...
எங்கே  என்  தேவதை தேவதை

உள்ளத்துக்குள்  உள்ளிருந்து  மெல்ல  மெல்ல  கொல்லுவது
காதல்  நோய்  தானோ.....
வைகை  என பொய்கை  என
மையலிலே  எண்ணியது கானல்  நீர்  தானோ
என்னை  நீயும்ம்  கூட எண்ண  கோலம்  போட்டேன் .
மீண்டும்ம்  கோலம்  போட உன்னை  தானே  கேட்பேன்..
எனக்கொரு  அடைக்கலம்  ...
வழங்குமோ உன்  இதயமே..  

அன்பே  வா  அருகிலே ....
என்  வாசல்  வழியிலே ....

உல்லாச  மாளிகை மாளிகை ...
எங்கே  என்  தேவதை தேவதை
நீ  தானே வேண்டும்   என்று   ஏங்கினேன் ....
நாள்தோறும் முள்ளின்  மீது  தூங்கினேன்...


http://www.youtube.com/watch?v=CP0xkJPrykQ&feature=related

Monday, December 6, 2010

நீ இன்றி நானும் - வாரணம் ஆயிரம்




பாடியவர் : S.P.B.சரண்
பாடல் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை 

வழி எங்கும் உந்தன் முகம் தான் 
வலி கூட இங்கே சுகம் தான்  

தொடுவானம் சிவந்து போகும் 
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே  

இனி உன்னை பிரிய மாட்டேன் 
துளி தூரம் நகர மாட்டேன் 
முகம் பார்க்க தவிக்கிறேன்  
என் இனிய பூங்காற்றே  

ஓஹ் ஷாந்தி ஷாந்தி ஓஹ் ஷாந்தி 
என் உயிரை உயிரை நீ ஏந்தி  
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி ? 
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி  

நீ இன்றி நானும் இல்லை  
ஏன் காதல் பொய்யும் இல்லை  
உன்னை காணும் நேரம் வருமா ? 
இரு கண்கள் மோட்சம் பெரும ?  

விரலோடு விழியும் வாடும் 
விரைகின்ற காலம் நோகும் 
இருந்தாலும் வருகிறேன் 
உன் மடியில் நான் தூங்க  
எனை வந்து உரசும் காற்றே  
அவளோடு கனவில் நேற்றே  
கைகோர்த்து நெருங்கினேன்  
கண் அடித்து நீ ஏங்க  

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி 
என் உயிரை உயிரை நீ ஏந்தி 
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி 
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி

கண்கள் இரண்டால் - சுப்பிரமணியபுரம்





படம்: சுப்பிரமணியபுரம்
பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்

பல்லவி
========

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
       என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
       சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
       (கண்கள் இரண்டால் உன்)

பெ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
        பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி
        கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
        ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
        ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
        இதை இருளிலும் படித்திட முடிகிறதே

சரணம் 1
=========

ஆ: இரவும் அல்லாத பகலும் அல்லாத‌
        பொழுதுகள் உன்னோடு கழியுமா
        தொடவும் கூடாத படவும் கூடாத‌
        இடைவெளி அப்போது குறையுமா
பெ: மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே
         மறுபுறம் நாணமும் தடுக்குதே
         இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

       என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
       சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

சரணம் 2
=========

பெ: கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌
         மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
         உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌
         கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
ஆ:  உனையன்றி வேறொரு நினைவில்லை
         இனி இந்த ஊனுயிர் எனதில்லை
         தடையில்லை சாவிலுமே உன்னோடு வர‌

பெ: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
          ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
          ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
         இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
         பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே
         நகர்வேனே மாற்றி
பெ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
         என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென‌
ஆ:  சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

என்று உன்னை - இதயமே இதயமே




என்று உன்னை கண்டேனோ பெண்ணே
அன்று எந்தன் உயிரை கண்டேனே
காலம் நின்றாலும் என் காற்றே நின்றாலும்
உன் மூச்சில் நானும் வாழ்வேனே கண்ணே
தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது
வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்
ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்

காதல் என்றும் பூக்கள் தான் கேட்கும்
காதல் என்றும் ரத்தம் கேட்காது
கடலில் வெள்ளம் தீர்ந்தே போனாலும்
காதல் பாரம் தீர்ந்தே போகாது
காயம் நேர்ந்தாலும் அடி மரணம் நேராது
உன் உறவு சங்கிலி உயிரை கட்டுதடி

கண்ணில் உந்தன் காதல் எண்ணங்கள்
அது தான் எந்தன் வாழ்வின் அர்த்தங்கள்
என் நெஞ்சை விட்டு உன் நினைவு போனாலே
என் உடலை விட்டு உயிரும் போய்விடுமே

தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது
வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்
ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன் 


http://www.youtube.com/watch?v=Kr6swEJF7fI

http://www.youtube.com/watch?v=k-dZW0ZFGPY&feature=related

நினைத்து நினைத்து - 7/G ரெயின்போ காலனி











நினைத்து நினைத்து பார்த்தேன் 
நெருங்கி விலகி நடந்தேன் 
உன்னால்தானே நானே வாழ்கிறேன் 
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே ?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச

முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....