Saturday, August 21, 2010

காதல் சடுகுடு - அலைபாயுதே
























பாடியவர் : எஸ்.பி.பி.சரண் & நவீன்
பாடல் : வைரமுத்து
இசை : A.R.ரஹ்மான்


காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)

அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால்
நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால்; ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்கின்றாய்

நகில நகில நகிலா ஓ..
விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)

ஓஹோ.. பழகும் போது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கையறையில் குழந்தையாகி
என்னை கொல்வாய் கண்ணே

(நவீன்)
காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)

(எஸ். பி. பி. சரண்)
நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ முள்ளாகி போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர்
எல்லாமே நீ அன்பே..
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீ அன்பே..
என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணின் அசைவிலே

நகில நகில நகிலா ஓ..
விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)

ஓஹோ.. பழகும் போது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கையறையில் குழந்தையாகி
என்னை கொல்வாய் கண்ணே

(நவீன்)

காதல் சடுகுடு குடு.. கண்ணைத் தொடு தொடு (4)

(எஸ். பி. பி. சரண்)

உன்னுள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம்; போதாது
என் காதல் எடை என்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ தானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே!

நகில நகில நகிலா ஓ..
விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)

ஓஹோ.. பழகும் போது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கையறையில் குழந்தையாகி
என்னை கொல்வாய் கண்ணே

(நவீன்)

காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)

No comments:

Post a Comment