Friday, August 20, 2010

அற்றை திங்கள் - சிவப்பதிகாரம்
















பாடியவர் : மதுபால கிருஷ்ணன் & சுஜாதா
பாடல் : வைரமுத்து
இசை : வித்யாசாகர்



அற்றை திங்கள் வானிடம்
அல்லி சென்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடும்

காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடும்

அடிதொட முடிதொட ஆசை பெருகிட நேரும் பலவித பரிபாஷை
பொடி பட பொடி பட நாணம் பொடி பட
கேட்கும் மனதினில் உயிரோசை

முடி தொட முகம் தொட மோகம் மூழ்கிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
உருகிடஉருகிட ஏக்கும் உருகிட கூடும் அனலிது குளிர் வீசும்

குலுங்கினேன் உடல் கூசிட கிறங்கினேன் விரல் மேய்திட
மயங்கினேன் சுகம் சேர்ந்திட தளும்பினேன் எனை நீ தொட பாய்ந்திட ஆய்ந்திட

காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடும்

அற்றை திங்கள் வானிடம்
அல்லி சென்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடும்

காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடும்

உடல் எது உடை எது தேடும் நிலை இது காதல் கடனிது அடையாது
இரவெது பகலேது தேங்கும் சுகமிது சாகும் வரையிலும் முடியாது

கனவெது நினைவெது தேங்கும் பொழுதிது காமப்பசி வரை அடங்காது
வலமெது இடமெது வாட்டும் கதையிது தீண்டும் வரையிலும் விழங்காது

நடுங்கலாம் குளிர் வாடையில் அடங்கலாம் உனது ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில் உறங்கலாம் அதிகாலையில் கூடலில் ஊடலில்

காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடும்

No comments:

Post a Comment