Thursday, August 19, 2010
விழியிலே என் விழியிலே - வெள்ளித்திரை
வெள்ளித்திரை 2008
பாடியவர் : சித்ரா
பாடல் : ந.முத்துக்குமார்
இசை : G.V. பிரகாஷ்
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே ..
உயிரிலே நினைவுகள் தளும்புதே..
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே ..
உயிரிலே நினைவுகள் தளும்புதே..
(Music)
இமைகளிலே கனவுகளை விதைத்தேனே..
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே
இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையேடு கை சேரத்தான்
உன் உருவம் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே ..
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே ..
உயிரிலே நினைவுகள் தளும்புதே..
(Music)
உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்
யாருக்குதான் நம் காதல் விடை தெரியும்?
காதல் சிறகானது இன்று சருகானது
என் உள்நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது ? என் பயணம் அது ..
பனித் திரை ஒன்று மறைகின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா ?
விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா ?
விழியிலே ஏன் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment