Friday, August 20, 2010
ஆழியிலே முக்குளிக்கும் - தாம் தூம்
பாடியவர் : ஹரிச்சரன்
பாடல் : ந.முத்துக்குமார்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறேவா மூச்சோடு குடியேறேவா
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் மாறி எந்நாளும் சூடேறேவா ?
என் ஜென்மம் ஈடேறவா ?
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் தின்மென்றே கன்னத்தில்
திம்மென்றே நெஞ்சத்தில் இச்சென்று
இதழ் வைக்கவா இச்சைக்கோர் இலை வைக்கவா ?
உன் 'உம்' என்ற சொல்லுக்கும் 'இம்' என்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா ?
மௌனத்தில் குடி வைக்கவா ?
அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி
மரித்தாலும் மறக்காதே அழகே
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிறந்தாலும்
உன்னை போலே இருக்காது அன்பே
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிறந்தாலும்
உனைப்போல இருக்காது அழகே
அழகே அழகே வியக்கும் அழகே
அழகே அழகே வியக்கும் அழகே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment