Monday, August 23, 2010

முத்தமிழே முத்தமிழே - ராமன் அப்துல்லா















பாடியவர் : எஸ்.பி.பி & சித்ரா
பாடல் : அறிவுமதி
இசை : இளையராஜா



முத்தமிழே முத்தமிழே
முத்த சத்தம் ஒன்று கேட்பதென்ன
முத்த தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே
முத்த தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன

காதல் வழி சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை
தாகம் வந்து பாய் விரிக்க
தாவணி பூ சிலிர்க்கிறதே
மோகம் வந்து உயிர் குடிக்க
கை வளையல் சிரிக்கிறதே
உந்தன் பேரை சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்
முத்தம் சிந்த.. சிந்த...ஆனந்தம் தான் ...

முத்தமிழே முத்தமிழே
முத்த சத்தம் ஒன்று கேட்பதென்ன
முத்த தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே

கனவு வந்து காத்திருக்கு
தூங்கிகொள்ள மடி இருக்கா
ஆசை இங்கு பசித்திருக்கு
இளமைக்கென்ன விருந்திருக்க
பூவைகில்லும் பாவனையில்
சூடிக்கொள்ள தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில்
முத்தம் பெற தீண்டுகிறாய்
மின்னல் சிந்தி சிரித்தாய்
கண்ணில் என்னை குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய் ஆஹா ....

முத்தமிழே முத்தமிழே
ஹ்ம்
முத்தமிழே
ஹ்ம் என்ன
முத்த சத்தம் ஒன்று கேட்பதென்ன
ஹ்ம் முத்த தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே முத்த சத்தம் ஒன்று கேட்பதென்ன
முத்த தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன

No comments:

Post a Comment